sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விபத்தில் சிக்கிய மாநகராட்சி துணை கமிஷனர் கார்

/

விபத்தில் சிக்கிய மாநகராட்சி துணை கமிஷனர் கார்

விபத்தில் சிக்கிய மாநகராட்சி துணை கமிஷனர் கார்

விபத்தில் சிக்கிய மாநகராட்சி துணை கமிஷனர் கார்


ADDED : நவ 06, 2025 01:09 AM

Google News

ADDED : நவ 06, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோட்டில், இரவில் மாநகராட்சி பெண் துணை கமிஷனர் சென்ற கார் விபத்தில் சிக்கியது.

ஈரோடு மாநகராட்சி துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் தனலட்சுமி. நேற்று முன்தினம் இரவு 7:35 மணியளவில் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து, அரசால் வழங்கப்பட்ட ஸ்கார்பியோ காரில் வெளியே சாலைக்கு வந்தார். காரை டிரைவர் லாரன்ஸ் ஓட்டியுள்ளார்.

மாநகராட்சிக்கு எதிரே திரும்பிய கார், எம்.எஸ். சாலையில் செல்ல முற்பட்டது.

அப்போது ப.செ.பார்க்கில் இருந்து எம்.எஸ். சாலையில் நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தில் இருந்த வந்த டிசையர் வாடகை காரை செல்வகுமார் ஓட்டி வந்தார். காரில் மூவர் இருந்தனர். மாநகராட்சி துணை கமிஷனர் சென்ற ஸ்கார்பியோ கார் மீது பக்கவாட்டில் மோதியது. இதில் இரு கார்களின் பக்கவாட்டு பகுதியில் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரு கார்கள் மோதியதில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இரு கார்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us