sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குவாரியில் பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அழிப்பு

/

குவாரியில் பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அழிப்பு

குவாரியில் பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அழிப்பு

குவாரியில் பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அழிப்பு


ADDED : ஏப் 19, 2025 01:27 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம், ஏ

டி.என்.பாளையம் அருகே, கல்குவாரியில் பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே சில மாதங்களுக்கு முன், வருவாய் துறையினரால் சீல் வைக்கப்பட்டிருந்த, தனியாருக்கு சொந்தமான கல் குவாரியில் முறைகேடாக உள்ளே நுழைந்து, பாறைகளை வெடி வைத்து உடைக்க முயற்சி செய்தனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் இரு தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இது தொடர்பான வழக்கில் கல்குவாரி மேலாளர் மற்றும் உரிமையாளர் உட்பட ஐந்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். குவாரியில் நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன், டிப்பர் லாரி, டிராக்டர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பாறைகளை வெடி வைத்து உடைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த, 375 ஜெலட்டின் குச்சி மற்றும் வெடி மருந்துகளை நிபுணர்கள் உதவியுடன், பங்களாபுதுார் போலீசார் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

இந்நிலையில், குவாரியில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்து, அதனை அழிப்பது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை நிறைவேற்றுவது தொடர்பான பணிகள் நேற்று முன்தினம் நடந்தது. அதன்படி, கோவை மாநகர வெடிபொருள் கண்டறிதல் உதவி ஆய்வாளர் சத்தியன் தலைமையிலான குழுவினருடன், சத்தி டி.எஸ்.பி., முத்தரசன், கோபி தாசில்தார் சரவணன், பங்களாபுதுார் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி உள்ளிட்டோர் முன்னிலையில், குவாரியில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களை, பயிற்சி பெற்ற நிபுணர்கள் உதவியுடன், குவாரியின் ஒரு பகுதிக்கு எடுத்துச் சென்று, செயலிழக்க செய்தனர். பணிகள் நடைபெற்ற போது சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பிற்கான ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us