/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.2.74 லட்சம் மதிப்பிலான 'குட்கா' பொருள் அழிப்பு
/
ரூ.2.74 லட்சம் மதிப்பிலான 'குட்கா' பொருள் அழிப்பு
ADDED : மார் 16, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் கடந்த பிப்., மாதம், உணவு பாதுகாப்பு துறையினர், பல்வேறு
பகுதிகளில் கடைகளில் நடத்திய ஆய்வில், புகையிலை மற்றும் தடை
செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து, 59 கடைகளுக்கு 'சீல்'
வைத்தனர்.
இவற்றில் பறிமுதலான, 2.7௪ லட்சம் ரூபாய் மதிப்பிலான
புகையிலை பொருட்களை, வெண்டிபாளையம் மாநகராட்சி உரங்கிடங்கில்,
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ், உணவு பாதுகாப்பு
பிரிவு ஆய்வாளர் செல்வம் முன்னிலையில் நேற்று அழித்தனர். புகையிலை
பொருள் விற்பனை நடந்தால், 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார்
தெரிவிக்கலாம்.

