/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அலகு குத்தி சத்தியில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
அலகு குத்தி சத்தியில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : மே 10, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் வடக்குபேட்டையில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், நடப்பாண்டு விழா கடந்த, ௧ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
நேற்று அதிகாலை அம்மன் அழைக்கப்பட்டது. அதை தொடர்ந்து அலங்கார பூஜை, மாவிளக்கு எடுத்து மக்கள் ஊர்வலமாக வந்தனர். இரவில் பக்தர்கள் அலகு குத்தி கோவிலுக்கு சென்றனர். விழாவையொட்டி சப்பரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்தது. இன்று காலை உரியடித்தல், சந்தனகாப்பு அலங்காரம், திருவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.