/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பைக்கில் கஞ்சா கடத்திய தாராபுரம் வாலிபர்கள் கைது
/
பைக்கில் கஞ்சா கடத்திய தாராபுரம் வாலிபர்கள் கைது
ADDED : நவ 04, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரம் போலீசார், அம்மாபட்டி பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பல்சர் பைக்கில் வந்த இருவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர்.
இதனால் அவர்களிடம் சோதனை செய்தபோது, ௧,௮௦௦ கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் தாராபுரம் எல்லிஸ் நகர் பழனிச்சாமி மகன் கோகுல், 22, மேற்கு பஜனை மட தெரு சுரேஷ்குமார் மகன் பாலயுவராஜ், 22, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், காங்கேயம் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

