sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆடிப்பண்டிகை நாளில் சூதாடிய 15 பேர் கைது

/

ஆடிப்பண்டிகை நாளில் சூதாடிய 15 பேர் கைது

ஆடிப்பண்டிகை நாளில் சூதாடிய 15 பேர் கைது

ஆடிப்பண்டிகை நாளில் சூதாடிய 15 பேர் கைது


ADDED : ஆக 05, 2011 01:59 AM

Google News

ADDED : ஆக 05, 2011 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஆடிப்பண்டிகை கொண்டாடத்தின் போது, பல்வேறு இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீஸார் அதிரடியாக கைதுசெய்தனர்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் ஆடிப்பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, புளியம்பட்டி, அந்தியூர் ஆகிய இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அம்மாபேட்டை, பெத்தக்காபாளையம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, பழனிச்சாமி (30), கிருஷ்ணமூர்த்தி (24), வெங்கடேஷ் (30), சரவணகுமார்(27) ஆகியோரை, அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் கைதுசெய்தார். புளியம்பட்டி, புங்கம்பள்ளி சுடுகாட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராமசாமி (43), துரைசாமி(55), முருகேசன் (47) மற்றும் சாணார்பதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரிமணி (49), தேவராஜ் (37), ரங்கசாமி (40) ஆகியோரை, இன்ஸ்பெக்டர் சுந்தரம் கைது செய்தார். அந்தியூர், செம்புளிச்சாம்பாளையம் கன்னிமார் கோவில் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட முஸ்தபா (40), பெருமாள் (54), முருகேசன் (39), பாண்டுரங்கன் (45), முனுசாமி (45) ஆகியோரை, அந்தியூர் போலீஸ் எஸ்.ஐ., அம்பிகா கைதுசெய்தார்.






      Dinamalar
      Follow us