sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

122 விநாயகர் சிலை ஈரோட்டில் ஊர்வலம்

/

122 விநாயகர் சிலை ஈரோட்டில் ஊர்வலம்

122 விநாயகர் சிலை ஈரோட்டில் ஊர்வலம்

122 விநாயகர் சிலை ஈரோட்டில் ஊர்வலம்


ADDED : செப் 06, 2011 01:43 AM

Google News

ADDED : செப் 06, 2011 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோட்டில் ஐந்து நாட்களாக வழிபாட்டில் இருந்த 122 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று, காவிரியில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

ஈரோடு டவர் லைன் காலனி, முனிசிபல் காலனி, வாசுகி வீதி, பெருமாள் கோவில் வீதி, வி.வி.சி.ஆர்., நகர், அசோகபுரம், வீரப்பன் சத்திரம், மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட 122 இடங்களில், ஹி÷ந்து முன்னணி சார்பில், செப்டம்பர் 1ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவை அனைத்தும் நேற்று மாலை 3 மணிக்கு, ஈரோடு சம்பத்நகர் நசியனூர் சாலைக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு, ஹிந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராஜா, ஹிந்து முன்னணி மாநில துணைத்தலைவர் பூசப்பன், மாநில செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் ஜெகதீஸ், பா.ஜ., மாநில பிரச்சார அணித்தலைவர் சரவணன் ஆகியோர் பேசினர். மாலை 4 மணிக்கு சம்பத் நகரில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது. அண்ணா தியேட்டர், பெரிய வலசு, முனிசிபல் காலனி, மேட்டூர் சாலை, எம்.ஜி.ஆர்., சிலை, பிரப்சாலை, காமராஜ் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, எஸ்.கே.சி., சாலை வழியாக காவிரியாற்றில் நேற்று இரவு 7 மணிக்கு விசர்ஜனம் செய்யப்பட்டன. ஏ.டி.எஸ்.பி., மகேந்திரன் தலைமையில் 300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us