ADDED : ஆக 28, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: தாளவாடி தாலுகாவுக்குட்பட்ட தலமலை ஊராட்சியில் மாவநத்தம், இட்டரை, தடசலட்டி, பெஜலட்டி, ராமரணை, காளிதிம்பம் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.
இப்பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் பொது வினியோக திட்டத்தில் ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாவநத்தம் கிராமத்தில் நேற்று வழங்கப்பட்ட ரேஷன் அரிசி தரமற்றதாக இருந்ததாக, அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர். வரும் நாட்களில் தரமான ரேஷன் அரிசி வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.

