/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனை துவக்கம்
/
கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனை துவக்கம்
ADDED : செப் 29, 2024 03:19 AM
ஈரோடு: ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள வசந்தம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி தள்ளுபடி விற்பனையை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.
பட்டு ரக உற்பத்தியில், பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை போன்ற பகுதியில் உற்பத்தியான பட்டுக்சேலைகள் விற்பனைக்கு உள்ளன. புதிய வடிவிலான மென்பட்டு சேலைகள் உள்ளன. 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. பட்டு, பருத்தி சேலைகள், போர்வை, படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், ஆடவருக்கான ஆயத்த சட்டை, மகளிருக்கான சுடிதார், ஆர்கானிக் பருத்தி சேலை போன்றவை உள்ளன.கடந்தாண்டு தீபாவளி விற்பனை இலக்காக ஈரோட்டுக்கு, 1.01 கோடி ரூபாயும், கோபி விற்பனை நிலையத்துக்கு, 28 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. நடப்பாண்டுக்கு ஈரோட்டுக்கு, 1.40 கோடி ரூபாயும், கோபிக்கு, 38 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்டல மேலாளர் அம்சவேணி, முதுநிலை மேலாளர் ஜெகநாதன், மேலாளர்கள் பாலமுருகன், மோகன்குமார், கைத்தறி உதவி இயக்குனர் தமிழ்செல்வன், மேலாளர் பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.