sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வட்டமலை கரை அணையில் இன்று தீபங்கள் ஜொலிக்கும்

/

வட்டமலை கரை அணையில் இன்று தீபங்கள் ஜொலிக்கும்

வட்டமலை கரை அணையில் இன்று தீபங்கள் ஜொலிக்கும்

வட்டமலை கரை அணையில் இன்று தீபங்கள் ஜொலிக்கும்


ADDED : டிச 15, 2024 01:37 AM

Google News

ADDED : டிச 15, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், டிச. 15-

வெள்ளகோவில் அருகே உத்தமபாளையத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. அணை, 650 ஏக்கர் பரப்பளவில், 27 அடி உயரத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. இதன் மூலம் உத்தமபாளையம் சுற்றியுள்ள 30 கிராமங்களில் ஆறாயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

கடந்த 1980ல் கட்டப்பட்ட இந்த அணையில், 25 ஆண்டுகள் கடந்து, கடந்த 2021 ல், அமைச்சர் சாமிநாதன் முயற்சியால், தண்ணீர் திறந்து விடப்பட்டது. விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

நீர்வரத்து காரணமாக 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு ஆண்டுதோறும் 20,000 மரக்கன்று நடப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அணைப்பகுதியில், அகல் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தப்படுகிறது. இது, விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் நடத்தப்படுகிறது.

நடப்பாண்டு ஆறாவது ஆண்டாக இன்று (15ம் தேதி) மாலை 3:30 மணிக்கு, வட்டமலை கரை ஓடை நீர் வழிந்தோடும் பகுதியில் 10,008 அகல் விளக்குகள் ஏற்றப்படவுள்ளது.






      Dinamalar
      Follow us