/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கங்காபுரம் டெக்ஸ்வேலியில் தீபாவளி விற்பனை மும்முரம்
/
கங்காபுரம் டெக்ஸ்வேலியில் தீபாவளி விற்பனை மும்முரம்
கங்காபுரம் டெக்ஸ்வேலியில் தீபாவளி விற்பனை மும்முரம்
கங்காபுரம் டெக்ஸ்வேலியில் தீபாவளி விற்பனை மும்முரம்
ADDED : அக் 13, 2025 02:05 AM
ஈரோடு:ஈரோடு
கங்காபுரம் டெக்ஸ்வேலி ஒருங்கிணைந்த ஜவுளி விற்பனை வளாகத்தில்,
'இந்த தீபாவளி தங்க தீபாவளி' பெயரில் விற்பனை நடந்து வருகிறது.
இதற்காக, 1,000க்கும் மேற்பட்ட கடைகளில் புதிய ரக ஆடை ரகங்கள்
குவிக்கப்பட்டு தீபாவளி சிறப்பு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
ஆச்சர்யமூட்டும்
குறைவான விலைகளில் தரமான சேலைகள் விற்பனைக்கு உள்ளதால்
வாடிக்கையாளர்கள் குடும்பங்களோடு குவிந்துள்ளனர். சட்டை, பேன்ட்,டி-சர்ட், ஷார்ட்ஸ் மற்றும் பல வகையான ஆடைகளை, மலிவு விலை வரம்பில் வாங்க, நல்ல இடம் ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலியாகும்.
அக்.,1ம்
தேதி முதல் தீபாவளி வரை முதல் இங்கு ஆடை வாங்கும் அனைவரும், ஸ்லோகன்
போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொரு நாளும் தங்க காயின் பரிசு
வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில், 3,000 கார்கள் மற்றும் இருசக்கர
வாகனங்களை நிறுத்தக்கூடிய விசாலமான கார் பார்க்கிங் வசதியும் உள்ளது.