sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு விழாவை தொடங்கி வைத்த தி.மு.க., - மா.செ.,அப்பட்டமான விதிமீறல் என அ.தி.மு.க., குற்றச்சாட்டு

/

அரசு விழாவை தொடங்கி வைத்த தி.மு.க., - மா.செ.,அப்பட்டமான விதிமீறல் என அ.தி.மு.க., குற்றச்சாட்டு

அரசு விழாவை தொடங்கி வைத்த தி.மு.க., - மா.செ.,அப்பட்டமான விதிமீறல் என அ.தி.மு.க., குற்றச்சாட்டு

அரசு விழாவை தொடங்கி வைத்த தி.மு.க., - மா.செ.,அப்பட்டமான விதிமீறல் என அ.தி.மு.க., குற்றச்சாட்டு


ADDED : செப் 02, 2025 01:22 AM

Google News

ADDED : செப் 02, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும், முதலமைச்சர் கோப்பைக்கான ஈரோடு மாவட்ட அளவிலான பெண்கள் ஹாக்கி போட்டி, புன்செய்புளியம்பட்டி கெ.ஓ.எம்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். இரண்டு நாட்கள் நடக்கும் போட்டியை, தி.மு.க., மாவட்ட செயலாளர் நல்லசிவம் துவக்கி வைத்தார். எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத நல்லசிவம், போட்டியை துவக்கி வைத்தது அப்பட்டமான விதிமீறல் என்று, அ.தி.மு.க., தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பவானிசாகர் ஒன்றிய அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெற்றிவேல் கூறியதாவது:

அரசு விழாவை பொருத்தவரை மக்கள் பிரதிநிதிகள் அல்லது துறை சார்ந்த அதிகாரிகள் துவக்கி வைப்பதே விதிமுறை. ஆனால் எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத நல்லசிவம் போட்டிகளை துவக்கி வைத்தது விதிமீறலாகும். அவருடன் தி.மு.க., நிர்வாகிகளும் கலந்து கொண்டு கட்சி நிகழ்ச்சியாக மாற்றிவிட்டனர். விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளும் விழாவில் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். பள்ளி தலைமை ஆசிரியர் உமா கவுரி கூறுகையில், ''ஈரோட்டில் நடந்த மீட்டிங்கில் கலந்து கொள்ள நான் சென்று விட்டேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us