ADDED : ஏப் 12, 2026 06:22 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு, திண்டல் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், 47; சோலாரில் உள்ள ஒரு வாட்டர் கேன் சப்ளை நிறுவனத்தில் வேன் டிரைவராக பணியாற்றினார்.
குடும்பத்தினர் கோவைக்கு சென்ற நிலையில், நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த, 10ம் தேதி காலை சோலார் பகுதியில் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டார். அப்போது ரயில் மோதியதில் பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
