ADDED : ஜூன் 16, 2026 03:53 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 58; இவரது மனைவி அமுசவள்ளி, 56; மூன்று மாதங்களாக ஈரோடு மாவட்டம் சிவகிரி, சடை-யப்பபுரத்தில் மனைவியுடன் வசித்தார். அமுச-வள்ளி விவசாய கூலி தொழிலாளி. சென்னிம-லையில் உள்ள தொழிற்சாலையில் முத்துசாமி வேலை செய்தார்.
கடந்த, 14ல் முத்துசாமி, அவ-ரது மருமகன் தமிழ்செல்வன், நண்பர் நந்தகுமார் மற்றும் அமுசவள்ளி ஆகியோர், கொடுமுடி அருகே காரணாம்பாளையம் அணையை சுற்றி பார்த்துவிட்டு, அமுசவள்ளி தவிர மற்ற மூவரும் அணையில் குளித்தனர். முத்துசாமி மட்டும் வெளியேறாமல், தண்ணீரில் இறந்த நிலையில் மிதந்தார். அமுசவள்ளி புகாரின்படி கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.
