/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அச்சுறுத்திய நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்
/
அச்சுறுத்திய நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்
ADDED : டிச 15, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு பெரியசேமூரை அடுத்த அம்மன்நகரில் கடந்த, 11ம் தேதி தெருநாய்கள் கடித்ததில், 18 பேர் காயமடைந்தனர்.
இதனால் இப்பகுதியில் தெரு-நாய்களை பிடிக்க, சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் இதுவரை, 34 தெருநாய்களை பிடித்துள்ளனர். இதில், 23 நாய்களுக்கு ஊசி மற்றும் கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மீதி நாய்களுக்கும் கருத்-தடை செய்யப்படும். தெருநாய்கள் பிடிக்கும் பணியும் தொடரும் என்று தெரிவித்தனர்

