/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஸ் ஸ்டாண்டில் மயங்கி விழுந்து முதியவர் பலி
/
பஸ் ஸ்டாண்டில் மயங்கி விழுந்து முதியவர் பலி
ADDED : மார் 11, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி:கோவை
மாவட்டம் அன்னுார் அருகேயுள்ள செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர்
தியாகராஜன், 72; சமையல் தொழிலாளி. வெளியூர் செல்ல
புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்டுக்கு நேற்று காலை வந்தார்.
பஸ்சுக்கு காத்திருந்தபோது மயங்கி விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர்
தகவலின்படி ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு சென்றது. மருத்துவ பணியாளர்
சோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.
புன்செய்புளியம்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு, சத்தி அரசு
மருத்துவமனைக்கு அனுப்பினர்.

