ADDED : அக் 19, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்சாரம் தாக்கி
முதியவர் பலி
கோபி, அக். 19-
கவுந்தப்பாடி அருகே ஓடத்துறையை சேர்ந்தவர் ராமன்,68; விவசாயி; இவர் கடந்த 16ம் தேதி காலை, 10:00 மணிக்கு, தனது வெள்ளாடுகளுக்கு, பச்சை தீனி கொண்டு வருவதாக, பக்கத்தில் இருந்த தோட்டத்துக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வராததால், அவரது குடும்பத்தார் தேடினார். அப்போது அதே பகுதியில் உள்ள தோட்டத்து மின்கம்பத்தில் இருந்து அறுந்து தொங்கி கொண்டிருந்த மின்கம்பி ராமன் மீது பட்டதில், மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார்.
இதையறிந்த அவரது குடும்பத்தார், ராமனின் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரின் மகள் சுமதி, 40, கொடுத்த புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

