ADDED : நவ 12, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்தில் முதியவர் பலி
கோபி, நவ. 12-
கோபி அருகே சவுண்டப்பூரை சேர்ந்தவர் அம்மாசை, 77. விவசாயி; நேற்று காலை, 9:15 மணிக்கு, அதே பகுதியில் அத்தாணி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்தியூரை சேர்ந்த தமிழரசன், 40, ஓட்டி வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அம்மாசை, கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அம்மாசை மகன் சுரேஷ் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

