ADDED : மே 09, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, மே 9
கோபி அருகே வாய்க்கால்ரோட்டை சேர்ந்தவர் முருகேசன், 60; கூலி தொழிலாளி; சத்தி சாலையில், கோவை பிரிவு என்ற இடத்தில், டி.வி.எஸ்., எக்சல் மொபட்டில் நேற்று காலை சென்றார். பின்னால் வந்த டாடா ஏஸ் சரக்கு ஆட்டோ மோதியதில் பலத்த
காயமடைந்தார்.
கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் மகன் கார்த்திக் புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.