sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டேங்கர் லாரி மோதியதால் முறிந்த மின்கம்பம்

/

டேங்கர் லாரி மோதியதால் முறிந்த மின்கம்பம்

டேங்கர் லாரி மோதியதால் முறிந்த மின்கம்பம்

டேங்கர் லாரி மோதியதால் முறிந்த மின்கம்பம்


ADDED : ஜன 03, 2024 11:53 AM

Google News

ADDED : ஜன 03, 2024 11:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை யூனியன் பசுவபட்டி, அத்திக்காட்டை சேர்ந்த செல்வம் மகன் கோபாலகிருஷ்ணன், 23; பசுவபட்டி பிரிவில் எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். பைக்கில் சென்னிமலைக்கு நேற்று காலை சென்றவர், 11:15 மணி அளவில் கடைக்கு திரும்பினார்.

சென்னிமலை - காங்கேயம் சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியை முந்தினார். அப்போது எதிரே ஒரு டேங்கர் லாரி வரவே, அதன் மீது மோதாமலிருக்க, திடீர் பிரேக் போட்டதில், நிலைதடுமாறி நடுரோட்டில் விழுந்தார். இதை கண்ட டேங்கர் லாரி டிரைவர், கோபாலகிருஷ்ணன் மீது லாரி ஏறுவதை தவிர்க்க, இடது பக்கம் திருப்பினார். அந்த இடத்தில் ரோட்டோரமாக இருந்த கம்பத்தில் மோதி நின்றது. இதில் கம்பம் உடைந்து விழுந்தது. இதனால் பயந்து போன லாரி டிரைவர் நல்லப்பன், போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.

நடுரோட்டில் விழுந்த கோபாலகிருஷ்ணனை மீட்ட அப்பகுதி மக்கள் மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம் மின் கம்பம் முறிந்ததால், சென்னிமலை பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

மின்வாரிய ஊழியர்கள் புது கம்பம் அமைத்து பணியில் ஈடுபட்டனர்., ௫ மணி நேரத்துக்குப் பிறகு மின் வினியோகம் கிடைத்தது.






      Dinamalar
      Follow us