/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காரில் குட்கா கடத்திய ஈரோடு ஆசாமி கைது
/
காரில் குட்கா கடத்திய ஈரோடு ஆசாமி கைது
ADDED : ஆக 20, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கவுந்தப்பாடி போலீசார், காஞ்சிக்கோவில் பிரிவு அருகே நேற்று மதியம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வந்த மகேந்திரா சைலோ காரில் சோதனையிட்டதில், 475 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. காரை ஓட்டி வந்த ஈரோட்டை சேர்ந்த தண்டபாணியை, 41, கைது செய்தனர். குட்கா பொருட்களுடன் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

