sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உள்ளாட்சி தேர்தலால் யூனியனில் இடமாற்றம்

/

உள்ளாட்சி தேர்தலால் யூனியனில் இடமாற்றம்

உள்ளாட்சி தேர்தலால் யூனியனில் இடமாற்றம்

உள்ளாட்சி தேர்தலால் யூனியனில் இடமாற்றம்


ADDED : செப் 17, 2011 02:14 AM

Google News

ADDED : செப் 17, 2011 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபிசெட்டிபாளையம்: உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 யூனியன் அலுவலகத்தில் மூன்று ஆண்டுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை, கோபி, நம்பியூர், டி.என்.பாளையம், சத்தி, பவானிசாகர், தாளவாடி ஆகிய 14 பஞ்சாயத்து யூனியன்கள் உள்ளன. இவற்றில், 226 பஞ்சாயத்துகள் அடங்கி உள்ளன.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 1,503 ஓட்டுசாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஈரோடு யூனியனில் 48, மொடக்குறிச்சி 142, கொடுமுடி 51, பெருந்துறை 122, சென்னிமலை 135, அந்தியூர் 121, அம்மாபேட்டை 148, கோபி 134, நம்பியூர் 102, டி.என்.பாளையம் 75, சத்தியமங்கலம் 111, பவானிசாகர் 111, தாளவாடி 72, பவானி யூனியனில் 131 ஓட்டுச்சாவடிகள் அமைகின்றன.உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் துவங்கி உள்ள நிலையில், யூனியன் அலுவலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய பி.டி.ஓ.,க்கள், ஏ.பி.டி.ஓ.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 யூனியன் அலுவலகத்திலும் பணியாற்றும் 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us