sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புரட்டாசி மாதம் எதிரொலி: தக்காளி விலை உயர்வு

/

புரட்டாசி மாதம் எதிரொலி: தக்காளி விலை உயர்வு

புரட்டாசி மாதம் எதிரொலி: தக்காளி விலை உயர்வு

புரட்டாசி மாதம் எதிரொலி: தக்காளி விலை உயர்வு


ADDED : செப் 29, 2011 01:14 AM

Google News

ADDED : செப் 29, 2011 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி தக்காளி விற்பனை களைகட்டி உள்ளதால், விலை உயர்ந்துள்ளது.ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஈரோடு நேதாஜி பெரிய மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்தாகிறது. தமிழக பகுதியில் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில், ஆந்திரா, கர்நாடகா பகுதியில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.ஒரு மாதத்துக்கு முன் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால், வரத்தும் கணிசமாக உயர்ந்தது. மார்க்கெட்டில் தக்காளி விற்பனையின்றி தேக்கம் அடைந்தது. அப்போது, மூன்று கிலோ; 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.வெளிமாநிலங்களில் மழை காரணமாக தக்காளி வரத்தும் சற்று குறைந்துள்ளது. தவிர, தக்காளி பயன்பாடு அதிகரிப்பால், வரத்து குறைந்தும் விலை கிலோவுக்கு 10 ரூபாயாக உயர்ந்தது. தற்போது, புரட்டாசி மாதம் பிறப்பை யொட்டி அசைவ பிரியர்கள் அனைவரும், சைவத்துக்கு மாறியதால் காய்கறி விலையும் கட்டுப்பாடின்றி விலை உயர்ந்து வருகிறது.அதேபோல், தக்காளி விலையும் 10 ரூபாய்க்கு விற்றது, தற்போது, ஐந்து ரூபாய் உயர்ந்து 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மேலும் புரட்டாசி மாதம் நீடிப்பால் விலை உயர வாய்ப்புள்ளதால், சைவப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின் தக்காளி விற்பனை சூடுபிடித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தக்காளி வியாபாரி முருகன் கூறியதாவது:ஆந்திரா, கர்நாடகா, மாரண்டஹள்ளி உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஈரோட்டுக்கு தக்காளி வரத்தாகிறது.

தினசரி 15 லோடு வரை நேதாஜி பெரிய மார்க்கெட்டுக்கு வரத்தாகிறது. தற்போது, புரட்டாசி மாதம் ஹிந்துக்கள் விரதம் இருந்து, சைவ உணவு மட்டுமே உண்பர். இதனால், 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, 15 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us