sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

200 கார், லாரி சகிதம்வேட்புமனு தாக்கல்

/

200 கார், லாரி சகிதம்வேட்புமனு தாக்கல்

200 கார், லாரி சகிதம்வேட்புமனு தாக்கல்

200 கார், லாரி சகிதம்வேட்புமனு தாக்கல்


ADDED : செப் 30, 2011 01:58 AM

Google News

ADDED : செப் 30, 2011 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் பஞ்சாயத்து யூனியனில் நத்தகாடையூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு எம்.எல்.ஏ., ஆதரவாளர் 200 கார், லாரி, வேன் புடைசூழ வந்து வேட்புமனு தாக்கல் செய்ததால், காங்கேயம் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது.நத்தகாடையூர் பஞ்சாயத்து தலைவராக, எம்.எல்.ஏ., நடராஜ் ஆதரவாளர் ஜெகதீசன் மனைவி கற்பகம் உள்ளார்.

மீண்டும் போட்டியிடும் இவர், நேற்று காலை நத்தகாடையூரிலிருந்து கார், லோடு ஆட்டோ, லாரி போன்ற 200 வாகனங்களில் அணிவகுத்து, மனு தாக்கல் செய்ய புறப்பட்டு காங்கேயம் வந்தனர். தொடர்ந்து வரிசையாக வாகனங்கள் சென்றதால், நேற்று காலை நத்தகாடையூரிலிருந்தே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஈரோட்டிலிருந்து வரும் லாரி, பஸ் போன்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.பழையகோட்டை ரோட்டிலிருந்து, சென்னிமலை ரோடு வழியாக அனைத்து வாகனங்களும் பஞ்சாயத்து யூனியன் வரை வந்ததால், காங்கேயம் நகர்ப்பகுதியில் பிற வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தன. மனுத்தாக்கல் செய்துவிட்டு பகல் 1.30க்கு வாகனங்கள் திரும்பி சென்ற பின்னரே போக்குவரத்து சீரானது.






      Dinamalar
      Follow us