/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் 49 மி.மீ., மழை நிரம்பியது தடுப்பணை
/
ஈரோட்டில் 49 மி.மீ., மழை நிரம்பியது தடுப்பணை
ADDED : அக் 06, 2024 02:52 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் ஈரோட்டில் அதிகபட்சமாக, 49.20 மி.மீ., மழை பதிவானது.
மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): மொடக்குறிச்சி, கொடுமுடி, கொடிவேரி அணை தலா--6, பெருந்துறை-3, சத்தி--2, சென்னிமலை-5, அம்மாபேட்டை,கோபி, குண்டேரிபள்ளம் அணை தலா-2.20, வரட்டுபள்ளம் அணை-4.20, நம்பியூர்-13, எலந்தகுட்டைமேடு-35.20, தாளவாடி-14. ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த மழையால், பெரும்பள்ளம் ஓடை நடுவேயுள்ள சூரம்பட்டி தடுப்பணை நேற்று நிரம்பி உபரி நீர் வழிந்தோடியது. சில தினங்களுக்கு முன்தான் தடுப்பணையில் ஆகாயத்தாமரை அகற்றப்பட்டது.