ADDED : ஜூன் 13, 2026 03:56 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழகத்தில்
ஆர்.டி.ஓ., - துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் நேற்று மாநில அளவில்
இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜா, கோபி
ஆர்.டி.ஓ.,வாக மாற்றம் செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மகேஸ்வரி, கோவை துணை ஆட்சியர்
(சிறப்பு பறக்கும் படை - தமிழ்நாடு மாநில வாணிப கழகம்) பணிக்கும், ஈரோடு
உதவி ஆணையர் (கலால்) தியாகராஜன், திருச்சி துணை ஆட்சியர் (சிறப்பு
பறக்கும் படை - தமிழ்நாடு மாநில வாணிப கழகம்) பணிக்கும் இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.
