/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகளிர் மேல்நிலைப்பள்ளியை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
/
மகளிர் மேல்நிலைப்பள்ளியை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
மகளிர் மேல்நிலைப்பள்ளியை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
மகளிர் மேல்நிலைப்பள்ளியை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
ADDED : பிப் 10, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி : கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தில், 1.90 கோடி ரூபாயில், ஒன்பது கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி நடக்கிறது.
அப்பணிகளை சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் தலைமையில் நேற்று ஆய்வு செய்தனர். ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, குழு உறுப்பினர் மற்றும் எம்.எல்.ஏ.,க்களான சிந்தனை செல்வன், சிவக்குமார், சேவூர் ராமச்சந்திரன், பரந்தாமன், கூடுதல் செயலர் சுப்பிரமணியம் வந்திருந்தனர். கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க குழுவினர் வலியுறுத்தினர்.