ADDED : ஆக 18, 2026 05:15 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; மொடக்குறிச்சி நேதாஜி வீதியை சேர்ந்த விவ-சாயி மயில்சாமி, 68; விவசாயி. கடந்த ஜூலை மாதம், 30ம் தேதி எலக்ட்ரிக்கல் பைக்கில் முள்-ளாம்பரப்பு சென்றார். அப்போது அவரது பைக் திருட்டு போனது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர், கடந்த, 2ம் தேதி சல்பாஸ் மாத்திரை தின்று விட்டார்.
ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்-சைக்காக நேற்று முன்தினம் காலை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் இறந்து விட்டது தெரிய வந்தது.
