sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிணற்றில் விழுந்த விவசாயி பலி

/

கிணற்றில் விழுந்த விவசாயி பலி

கிணற்றில் விழுந்த விவசாயி பலி

கிணற்றில் விழுந்த விவசாயி பலி


ADDED : ஜூன் 25, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.பி., காட்டூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் ஜெகநாதன், 38; இவருக்கு, வெள்ளக்கல் பட்டியில் விவசாய நிலம் உள்ளது. நேற்று மாலை, 4:00 மணிக்கு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வீட்டிலிருந்து சென்றுள்ளார். கிணற்றின் அருகே சென்று மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது, பைப்பில் இருந்து வேகமாக தண்ணீர் வந்துள்ளது. இதில் நிலை தடுமாறி அருகில் உள்ள கிணற்றில் ஜெகநாதன் விழுந்தார்.

அவ்வழியே சென்றவர்கள், கிணற்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்துள்ளனர். உள்ளே ஜெகநாதன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வருவதற்குள் ஜெகநாதன் நீரில் மூழ்கி பலியானார். இதையடுத்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us