ADDED : அக் 02, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை:சென்னிமலை யூனியன், வெள்ளோடு அடுத்துள்ள, வெள்ளமுத்துகவுண்டர் வலசு பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி,65; விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை சென்னிமலை - பெருந்துறை ஆர். எஸ்., ரோடு, தகடூர் பஸ் நிறுத்தம் அருகில் தன் டி.வி.எஸ்., மொபட்டில் சென்று ெகாண்டிருந்தார்.
அப்போது ரோட்டின் குறுக்கே வந்த மாடு, அவர் மீது மோதியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார். சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.