sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாய்களால் கால்நடைகள் பலி இழப்பீடு கேட்கும் விவசாயிகள்

/

நாய்களால் கால்நடைகள் பலி இழப்பீடு கேட்கும் விவசாயிகள்

நாய்களால் கால்நடைகள் பலி இழப்பீடு கேட்கும் விவசாயிகள்

நாய்களால் கால்நடைகள் பலி இழப்பீடு கேட்கும் விவசாயிகள்


ADDED : நவ 07, 2024 01:50 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்:திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, உடுமலை, காங்கேயம், வெள்ளக்கோவில் மூலனுார் பகுதிகளில் தெருநாய்கள் அதிகம் உள்ளன. இவை, பட்டிகளுக்குள் புகுந்து, ஆடுகளை வேட்டையாடுவதால், கால்நடை வளர்ப்போர் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, பி.ஏ.பி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:

கடந்த ஆறு மாதங்களில், தெருநாய்களால், 200க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன. இதனால், விவசாயிகளுக்கு அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

கள்ள சாராயத்தால் உயிரிழப்போருக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் அரசு, நாய்கடியால் பலியாகும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்காதது மன வேதனையை ஏற்படுத்துகிறது. நாய்களுக்கு கருத்தடை செய்வது வெறும் கண் துடைப்பாகவே உள்ளது; கருத்தடை செய்வது இப்பிரச்னைக்கு தீர்வாகாது.

நாய்க்கடிக்கு பலியாகும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தெரு நாய்களை, தொல்லை தரும் விலங்கு பட்டியலுக்கு மாற்றி, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us