ADDED : ஜன 21, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், திண்டலில் உள்ளது. சித்தோட்டை சேர்ந்த ஓம்சக்தி ஆறுமுகம், 75, அலுவ-லகம் எதிரே நேற்று அமர்ந்து, காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். அப்போது அவர் கூறிய-தாவது: என்னுடன் சேர்ந்து, 1,000க்கும் மேற்பட்டோர் சானிட்டரி இன்ஸ்பெக்டர் கோர்ஸ் முடித்து, சுகாதார ஆய்வாளர்
பணியில் சேர்ந்தோம். கிரேடு-1 பதவி உயர்வு  கேட்டு, சென்னை உயர் நீதி-மன்றத்தில் வழக்கு தொடுத்தோம். அரசு இதை எதிர்த்த நிலையில், 2015 பிப்.,25ல் எங்களுக்கான உரிமையை உறுதிப்ப-டுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை, 1,000 பேருக்கான பணபலன்கள்
வழங்கப்படவில்லை. இவ்வாறு கூறினார். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடைந்து, உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று கிளம்பி சென்றார்.

