ADDED : நவ 05, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு நாடார்மேடு
விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பாக்கியராஜ், 57; அட்டைக்கடை
தொழிலாளி. கடந்த, 1ம் தேதி மாலை சம்பத் நகர் கொங்கு கலையரங்கம்
அருகே, நண்பர் சுரேஷ் என்பவருடன் வேலைக்கு சென்றார்.
சுரேஷ் வேறு
வேலையாக வெளியே சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வந்தபோது
பாக்கியராஜை காணவில்லை. பாக்கியராஜ் மகன் பிரசாத் புகாரின்படி
வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

