sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பயிர்களை நாசமாக்கும் யானைகளால் அச்சம்

/

பயிர்களை நாசமாக்கும் யானைகளால் அச்சம்

பயிர்களை நாசமாக்கும் யானைகளால் அச்சம்

பயிர்களை நாசமாக்கும் யானைகளால் அச்சம்


ADDED : ஆக 18, 2025 03:15 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்,: தாளவாடி மலை கிராமத்தில் இரவில் வரும் யானைகளால் பயிர் சேதம் ஏற்படுவது தொடர்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தாளவாடி மலை கிராம பகுதியில் உள்ள இக்கலுார், திகினாரை, அருள்வாடி, சூசையபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், இரவானதும் வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள், விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.கடந்த மூன்று நாட்களாக தாளவாடி அருகே சேஷன் நகரில், இந்து மகேந்திர குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கம்பி வேலியை உடைத்து புகுந்த யானைகள், இரண்டு ஏக்கரிலான சோளம், 400 வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. இவற்றின் சேத மதிப்பு, 1.50 லட்சம் ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் மலை கிராம விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். யானைகள் கிராமங்களில் நுழையாமல் தடுக்க, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us