ADDED : ஜூலை 07, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
கொடுமுடி; கொடுமுடி வடக்கு புதுபாளையத்தில் நேற்று மாலை, தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த காய்ந்த சம்பு புல்லில் (சீமார் புல்) தீப்பிடித்-தது.
காற்றின் வேகத்தால் தீ பரவி பற்றி எரிந்-ததில், பல ஏக்கர் பரப்பிலான சம்பு புற்கள் தீக்கி-ரையானது. இதன் அருகில் இருந்த கரும்பு காட்-டிலும் தீப்பிடித்தது. இதில் பல ஏக்கர் பரப்பிலான கரும்பு பயிர் சாம்பலானது. தீ ஜூவாலையை பல கி.மீ., துாரம் வரை பார்க்க முடிந்தது. அப்பகு-தியில் கரும்புகை சூழ்ந்ததால், மின் வாரியத்தினர் மின் சப்ளையை தற்காலிகமாக துண்டித்தனர். கொடுமுடி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
