/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்ரீநகர் வன்னி விநாயகர் கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா
/
ஸ்ரீநகர் வன்னி விநாயகர் கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா
ஸ்ரீநகர் வன்னி விநாயகர் கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா
ஸ்ரீநகர் வன்னி விநாயகர் கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா
ADDED : மார் 02, 2024 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கோபி, ல.கள்ளிப்பட்டி பிரிவு அருகே ஸ்ரீநகரில் உள்ள வன்னி விநாயகர், மகா மாரியம்மன் கோவிலில், கும்பாபிேஷக முதலாமாண்டு விழா நடந்தது.
இதையொட்டி பொங்கல் வைத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு பூஜை நடந்தது. தவிர பாலாபிஷேகம், மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம், மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கோபி நகராட்சி 11வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் முத்து ரமணன் செய்திருந்தார்.

