sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானி கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

/

பவானி கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

பவானி கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

பவானி கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை


ADDED : ஜூலை 27, 2025 01:22 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானிசாகர், தென்மேற்கு பருவ மழை காரணமாக, பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணை உயரம், 105 அடி வரை தண்ணீர் தேக்க முடியும். ஆனால் ஜூலை மாதம் இறுதிவரை, ௧௦௦ அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்க முடியும். அதன் பிறகு வரும் நீரை, அணை நிரம்பியதாக கருதி, உபரி நீராக வெளியேற்றப்படும்.

நேற்று மாலை அணை நீர்மட்டம், ௯௯.௧௩ அடியாக இருந்தது. அணை நீர் வரத்து, ௫,௫௪௮ கன அடியாக இருந்தது. இந்நிலையில் இரவு, ௧௦:௦௦ மணிக்கு, பில்லுார் அணையில் இருந்து, ௯,௦௦௦ கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இன்று காலை அணைய வந்தடையும். அதன் பிறகு அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும். இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, அணை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், நேற்று மாலை முதலே வெ ள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

குறிப்பாக கரையோர கிராமங்களான, பவானிசாகர், சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், உள்ளாட்சித்துறை ஊழியர்கள், ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us