/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இறந்த மயில் சடலம் வனத்துறையினர் மீட்பு
/
இறந்த மயில் சடலம் வனத்துறையினர் மீட்பு
ADDED : ஜூலை 29, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, கொல்லம்பாளையம் அருகில், ஜீவானந்தம் வீதியில் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் ஒரு மயில் இறந்து கிடந்தது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையம், போலீசார், வனத்துறையினர் என மூன்று துறையினருக்கும் அடுத்தடுத்து தகவல் கொடுத்தும் யாரும் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று காலை, 7:௦௦ மணிக்கு சென்ற வனத்துறையினர், மயில் சடலத்தை பெற்று சென்றுள்ளனர்.