ADDED : மே 11, 2026 03:20 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே கூகலுாரை சேர்ந்தவர் அன்பரசு, 48, சமையல் தொழிலாளி; இவரின்
மனைவி சிவகாந்தி, 40; இருவரும் கடந்த, 8ம் தேதி இரவு அதே பகுதியில்
சுவாமி ஊர்வலத்தை காண நின்றிருந்தனர். ஊர்வலத்தில் வந்த நான்கு
பேர், சிவகாந்தி மீது மோதுவது போல்சென்றனர்.
இதை தட்டிக்கேட்ட
சிவகாந்தி, அன்பரசை, தகாத வார்த்தை பேசி, தாக்கி கொலை மிரட்டல்
விடுத்துள்ளனர். அன்பரசு கொடுத்த புகாரின்படி அதே பகுதியை சேர்ந்த
சாது, 25, மாணிக்கம், 20, மோகன், 50, சுரேஷ், 30, ஆகியோரை, கோபி
போலீசார் கைது செய்தனர்.
