sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெள்ளகோவில் அருகே நள்ளிரவில் குன்றை இடித்த நான்கு பேர் கைது

/

வெள்ளகோவில் அருகே நள்ளிரவில் குன்றை இடித்த நான்கு பேர் கைது

வெள்ளகோவில் அருகே நள்ளிரவில் குன்றை இடித்த நான்கு பேர் கைது

வெள்ளகோவில் அருகே நள்ளிரவில் குன்றை இடித்த நான்கு பேர் கைது


ADDED : ஜூலை 26, 2025 01:14 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், :வெள்ளக்கோவிலை அடுத்த ஓலப்பாளையம், திருமண்கரடு மற்றும் பூசாரிவலசு, வெள்ளக்கோவில் பகுதிகளில், 100 சதுர கி.மீ., பரப்பளவில் இரும்புத்தாது இருப்பது குறித்து மத்திய அரசு நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில் திருமண்கரடு பகுதியில் இரும்புத்தாது குறித்து, 2018ல் ஆரம்ப கட்ட ஆய்வு பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டது.

திருமண்கரடு எனும் சிறு குன்று உள்ளது. இதில் பச்சமலை குமாரசாமி கோவில் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு, 10க்கும் மேற்பட்ட நபர்கள் குன்றின் மீது கோழிகளை கழுத்து அறுத்து, எலுமிச்சை பழம், ஏணி, டயர், வைத்து பூஜை செய்தனர். ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சிறிய மலைக் குன்றை இடித்துள்ளனர். சத்தம் கேட்டு அப்பகுதியினர் சென்று விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர். பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கிருந்து ஓடியுள்ளனர்.

இதனால் மொபைல்போனில் தகவல் அளித்து அனைத்து சாலைகளும் கண்காணிக்கப்பட்டதில், நான்கு பேர் சிக்கினர். இவர்களிடம் வெள்ளகோவில் போலீசார், வருவாய் துறையினர் விசாரித்தனர். குன்றை உடைக்க பயன்படுத்திய ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல்

செய்தனர்.

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் குமரேசன், 45, வீரக்குமார், 40; க.பரமத்தி மூர்த்தி, 40; திருச்சி மாவட்டம் முசிறி குமரவேல், 45, என தெரிய வந்தது. புதையல் தேடி வந்து குன்றை இடித்தனரா அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us