/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபைல் போன் பறித்த 4 பேர் கும்பலுக்கு காப்பு
/
மொபைல் போன் பறித்த 4 பேர் கும்பலுக்கு காப்பு
ADDED : ஜன 24, 2026 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை; சென்னிமலையில் ஒரு டெக்ஸ்டைல் கம்பெ-னியில் வேலை செய்து வரும் பீஹார் மாநில தொழிலாளி பெரோஜ். கடந்த, 19 ல் சிப்காட் அருகே வேலைக்கு சென்றார்.
அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள், அவரது மொபைல்-போனை பறித்து சென்றனர். புகாரின்படி விசாரித்த சென்னிமலை போலீசார், ஊத்துக்குளி ஆர்.எஸ்., பகுதி பிரகாஷ், 23, அருண்குமார், 22; ஊத்துக்குளி கோவில்பா-ளையம் வெற்றிவேல், 23; வண்டிபேட்டை தரணி-தரன், 18; என நான்கு பேரை கைது செய்தனர். மொபைல்போனையும், ஒரு டூவீலரையும்
பறிமுதல் செய்தனர்.

