ADDED : அக் 26, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், தாராபுரத்தை சேர்ந்த அருண்குமார், 21. நண்பர் கோகுல், 22. இவர்களை சந்திக்க திண்டுக்கல்லை சேர்ந்த நண்பர்கள், நான்கு பேர் வந்தனர். மது அருந்தினர்; போதையில் இருவரையும் தாக்கி விட்டு, டூவீலர், போனை பறித்து சென்றனர்.
புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். ஒட்டன்சத்திரம் ரோட்டில் சென்ற, நான்கு பேரிடம் விசாரித்தனர். திண்டுக்கல் சரவணன், 29, கவியரசு, 26, தாராபுரம் ரஞ்சித், 35 மற்றும் கணேசன், 24 என, தெரிந்தது. கைது செய்து, டூவீலர், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

