sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மரபணு மாற்ற நெல்லை அனுமதிக்க கூடாது! உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் ஆவேசம்

/

மரபணு மாற்ற நெல்லை அனுமதிக்க கூடாது! உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் ஆவேசம்

மரபணு மாற்ற நெல்லை அனுமதிக்க கூடாது! உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் ஆவேசம்

மரபணு மாற்ற நெல்லை அனுமதிக்க கூடாது! உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் ஆவேசம்


ADDED : மே 18, 2025 05:55 AM

Google News

ADDED : மே 18, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: ''மரபணு மாற்றப்பட்ட நெல் ரகங்கள் அமல்படுத்தப்பட்டால், மிகப்பெரிய விவசாய போராட்டங்கள் நடக்கும்,'' என, உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து கண்-டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கடந்த காலத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், மரபணு மாற்-றப்பட்ட பருத்தி விதைகள் அமல்படுத்தப்பட்டு, பல மடங்கு விளைச்சல் அதிகரிக்கும் என்று ஆசை காட்டி பயிரிட வைத்-தார்கள்.

அதிக கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகளுக்கு விளைச்சல் கிடைக்கவில்லை. நோய் தாக்குதல் காரணமாக விவசாயிகள் நஷ்-டத்தை சந்தித்து தற்கொலை செய்த வரலாறுகளும் நடந்துள்ளன.

மரபணு மாற்றப்பட்ட நெல் ரகமாக இருந்தாலும், கத்தரி, தக்-காளி என காய்கறி பயிர்களாக இருந்தாலும், இவற்றை தமிழ-கத்தில் அனுமதிக்க கூடாது என்று போராட்டம் நடத்தப்பட்டது.

மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் காய்கறிகளோ, நெல் உள்ளிட்ட தானியங்களோ உற்பத்தி செய்யப்பட்டால், அதன் மூலம் மண்ணுக்கும் மனித உடலுக்கும் ஆபத்து உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் இது குறித்து தெளிவுபடுத்-தியதை தொடர்ந்து, மரபணு மாற்றப்பட்ட விதைகள் தமிழ-கத்தில் அனுமதிக்கப்படவில்லை.

கடந்த காலத்தைப் போன்றே, தற்போது, மரபணு மாற்றப்-பட்ட, திருத்தப்பட்ட நெல் ரகங்களை கொண்டுவர முயற்சி நடந்து வருகிறது. மத்திய அரசு இதை திரும்ப பெற வேண்டும். இயற்கை வேளாண்மை ஊக்குவித்து, பாரம்பரிய விதை ரகங்-களை மீட்டெடுத்து, விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் மானிய திட்டங்களை வழங்கி வரும் பிரதமர் மோடி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அனுமதிக்க கூடாது.

இதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலினும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக விவசாயம் மற்றும் மக்களை ஆபத்-திலிருந்து காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us