/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமி கர்ப்பம் - திருமணம் போக்சோவில் வழக்குப்பதிவு
/
சிறுமி கர்ப்பம் - திருமணம் போக்சோவில் வழக்குப்பதிவு
சிறுமி கர்ப்பம் - திருமணம் போக்சோவில் வழக்குப்பதிவு
சிறுமி கர்ப்பம் - திருமணம் போக்சோவில் வழக்குப்பதிவு
ADDED : செப் 22, 2024 04:10 AM
ஈரோடு: கொடுமுடி, தட்டாம்பாளையத்தை சேர்ந்த தங்கவேலு மகன் மணிகண்ட ராஜ், 22, கூலி தொழிலாளி. கொடுமுடியை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கினார். புகாரின்படி பெருந்துறை அனைத்து மகளிர் போலீசார், மணிகண்டராஜ் மீது, போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் ரமேஷ், 23; இவருக்கு தர்மபுரியை சேர்ந்த, 16 வயது சிறுமியை, சத்தி அருகே பண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து வைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி, சைல்டு லைனில் புகார் தெரிவித்தார். அவர்கள் புகாரின்படி விசாரித்த பவானி அனைத்து மகளிர் போலீசார், ரமேஷ், அவரது தந்தை, உடந்தையாக இருந்த மூவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்படும் என்று, போலீசார் தெரிவித்தனர். உள்ளது.