/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமிகள் கர்ப்பம் 2 பேர் மீது வழக்கு
/
சிறுமிகள் கர்ப்பம் 2 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 04, 2025 01:33 AM
ஈரோடு, ஜன. 4-
ஈரோடு, கங்காபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார், 29; ஈரோட்டை சேர்ந்த, 14 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறுமி தற்போது இரண்டு மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இதுபற்றி ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல குழுமத்துக்கு தகவல் கிடைத்தது.
குழந்தைகள் நலக்குழுமம் சார்பில் நடத்திய விசாரணையில் சம்பவத்தை உறுதி செய்து, அவர்கள் கொடுத்த புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், தினேஷ்குமார் மீது, போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் ஈரோடு, மாமரத்துப்பாளையத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன், 21, 16 வயது சிறுமியை காதல் திருமணம் செய்தார். அவரும் இரண்டு மாத கர்ப்பமாக உள்ளார். இதுபற்றிய மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தினர் புகாரின்படி, மகளிர் போலீசார், ஹரி கிருஷ்ணன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.