sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபி ஆட்டோ டிரைவர் கொலை; மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள்

/

கோபி ஆட்டோ டிரைவர் கொலை; மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள்

கோபி ஆட்டோ டிரைவர் கொலை; மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள்

கோபி ஆட்டோ டிரைவர் கொலை; மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள்


ADDED : ஜூலை 11, 2024 04:21 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில், அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோபி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், கோபி, கோட்டுப்புள்ளாம்பாளையம் அருகே மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமார், 30, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இந்துமதி, 26. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த, 2020ல், அதே பகுதியில் உள்ள பள்-ளத்தில், சாக்கு மூட்டையில் தலையில் பலத்த காயங்களுடன், குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து குமாரின் தந்தை பழனிசாமி கொடுத்த புகார்படி, நம்பியூர் போலீசார் விசா-ரணை செய்தனர்.

அதில், கோபி அருகே வடுகபாளையத்தை சேர்ந்த ஸ்ரீதர், 28, என்-பவருக்கும், இந்துமதிக்கும் இருந்த கள்ளக்காதலை கண்டித்த குமாரை, அவர்கள் இருவரும் சேர்ந்து கட்டையால் தாக்கி கொலை செய்து, சாக்கில் அடைத்து பள்ளத்தில் வீசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு, கோபி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தயா-நிதி, கொலையில் தொடர்புடைய இந்துமதி, ஸ்ரீதர் ஆகிய இருவ-ருக்கும் தலா ஆயுள் தண்டனை, தலா, 10 ஆயிரம் ரூபாய் அபரா-தமும், சடலத்தை மறைத்த குற்றத்துக்காக, இருவருக்கும் கூடுத-லாக இரண்டு ஆண்டு சிறை தண்டனை, தலா, 2,000 ரூபாய் அப-ராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us