sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்டத்தில் 2வது நாளாக அரசு பஸ் சேவை பாதிப்பு

/

மாவட்டத்தில் 2வது நாளாக அரசு பஸ் சேவை பாதிப்பு

மாவட்டத்தில் 2வது நாளாக அரசு பஸ் சேவை பாதிப்பு

மாவட்டத்தில் 2வது நாளாக அரசு பஸ் சேவை பாதிப்பு


ADDED : அக் 09, 2024 12:52 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் 2வது நாளாக

அரசு பஸ் சேவை பாதிப்பு

ஈரோடு, அக். 9-

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நாளாக நேற்றும், 175க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயங்காததால் மக்கள் அவதிப்பட்டனர்.

ஈரோடு அரசு போக்குவரத்து கழகத்தில் தி.மு.க., தொழிற்சங்கமான எல்.பி.எப். மண்டல நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. இதனால் கடந்த சில தினங்களாக சங்க உறுப்பினராக உள்ள டிரைவர், கண்டக்டர், தொழில் நுட்ப பணியாளர்கள், பணியில் இல்லாததால் அரசு பஸ் சேவை பாதிக்கப்பட்டது. ஈரோடு அரசு போக்குவரத்து மண்டலத்தில், 13 கிளைகளில், ஏழு கிளைகளில், 110 பஸ்கள் இயங்கவில்லை. நேற்று இரண்டாம் நாளாக, 175க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயங்கவில்லை. பவானி கிளையில் மட்டும், 35 பஸ்கள் இயக்கப்படவில்லை. குறிப்பாக தொலை துார பஸ்கள் நிறுத்தப்பட்டன. நாளை தேர்தல் நிறைவு பெறுகிறது. அதுவரை பஸ் சேவையில் பாதிப்பு ஏற்படும் என்பது உறுதியாகி உள்ளது. இதற்கிடையில் தொழிலாளர்கள் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று கூறி, ஏற்கனவே, 10ம் தேதி வரை விடுப்பு பெற்றவர்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us