ADDED : பிப் 17, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாலை நேர தர்ணாவில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமை வகித்தார்.பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது. அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேசிய கல்வி கொள்கையான என்.இ.பி.,யை கைவிட வேண்டும். மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகிகள் சரவணமணி, விஜயமனோகரன், சீனிவாசன், சுமதி உட்பட பலர் பேசினர்.