ADDED : நவ 01, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கலெக்டர் கந்தசாமி தலைமையில், அரசு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம் நடந்தது. பணி மாறுதல், பதவி உயர்வு பணியிட மாறுதல், மருத்துவ காப்பீடு, செலவினம் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக மனுக்கள் வழங்கினர்.
தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிற மனுக்கள் மீது நடவடிக்கை வழங்க, அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லா, அலுவலக பொது மேலாளர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

