sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெள்ளாளபாளையம் வழியாக அரசு டவுன் பஸ் இயக்கம்

/

வெள்ளாளபாளையம் வழியாக அரசு டவுன் பஸ் இயக்கம்

வெள்ளாளபாளையம் வழியாக அரசு டவுன் பஸ் இயக்கம்

வெள்ளாளபாளையம் வழியாக அரசு டவுன் பஸ் இயக்கம்


ADDED : ஜன 28, 2025 06:52 AM

Google News

ADDED : ஜன 28, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: ஆப்பக்கூடல் அருகே வெள்ளாளபாளையம் வழியாக அரசு டவுன் பஸ் இயக்க, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் மற்றும் அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலத்திடம், மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கவுந்தப்பாடி டெப்போவில் இருந்து, 9-ம் எண் கொண்ட டவுன் பஸ் இயக்கம் நேற்று தொடங்கியது. வெள்ளாளபாளையத்தில் இருந்து பஸ் இயக்கத்தை எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பஸ் தினமும் காலை, 9:25 மணிக்கு கூத்தம்பூண்டியில் புறப்படும். கோபி செல்லும் போது ரைஸ் மில்லில் இருந்து வெள்ளாளபாளையம் வரை செல்லும். அங்கிருந்து மீண்டும் ரைஸ்மில், ஆப்பக்கூடல் வழியாக கவுந்தப்பாடி செல்லும். காலை ஒரு முறை மட்டுமே வந்து செல்லும்.

மீண்டும் கவுந்தப்பாடி பஸ் ஸ்டாண்டில் இருந்து மதியம், 2:20 மணிக்கு கே-10 டவுன் பஸ், ஆப்பக்கூடல், ரைஸ்மில், வெள்ளாளபாளையம், முனியப்பன்பாளையம் வழியாக அந்தியூர் செல்லும். மீண்டும் இரவு, 7:00 மணிக்கு அந்தியூரில் இருந்து அதே வழித்தடத்தில் கவுந்தப்பாடி செல்லும். இந்த பஸ், மதியம் மற்றும் இரவு என இருமுறை இயக்கப்படும் என்றும், போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us